Saturday, October 11, 2008

பாக். நிலநடுக்கம்: பலி 100 ஆக உயர்ந்தது!

பாகிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

குவெட்டா நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 70 கி.மீட்டரில் இன்று அதிகாலையில் 5 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 6.4 ஆகப் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

அதிகாலை நேரம் என்பதால், மக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். பலர் தூங்கிய நிலையிலேயே உயிரிழந்தனர். வீடுகள் இடிந்து விழுந்ததிலும், கட்டிட மேற்கூரைகள் சாய்ந்தும் கிடப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது.

கடந்த 1935ஆம் ஆண்டில் குவெட்டாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நில‌ந‌டுக்க‌த்திற்கு ப‌லியானவ‌ர்களின் குடும்ப‌திற்கு ஆழ்ந்த‌ அனுத‌ப‌ங்க‌ள்!

No comments: